பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை தெரிவித்தது. இதையடுத்து பலரும் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால் மலையாள சினிமா உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது. மேலும் அங்குள்ள நடிகர் சங்கமும் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்த மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.
சினிமா துறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை சந்திப்பது பற்றி நடிகை குஷ்பு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு : சினிமா மட்டுமல்லாது எல்லா துறையிலும் இது நடக்கிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என கேட்காமல் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதேசமயம் அதை உடனே சொன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெண்களை ஆண்கள் மதியுங்கள். பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் குரல் கொடுங்கள். இதுபோன்ற பிரச்னைகளுக்கு பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு தருவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேச வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ‛நோ' என்றால் ‛நோ' தான். உங்கள் கண்ணியம், மரியாதையை ஒரு போதும் விட்டுத்தராதீர்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.