மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் முதல் பாடல் ' கோல்டன் ஸ்பெரோ' வருகின்ற ஆகஸ்ட் 30ந் தேதி அன்று வெளியாகிறது. இதில் பிரியங்கா மோகன் நடனம் ஆடி உள்ளார். இப்பாடல் பற்றி எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "நீக் பட முதல் பாடலை தனுஷ் உடன் இணைந்து பார்த்தேன். பிரியங்கா மோகன் ஸ்டைல் ஆக நடனம் ஆடியுள்ளார். தனுஷ் இந்த பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியுள்ளார். குறிப்பாக இந்த பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார். அற்புதமாக எழுதியுள்ளார்" என பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.