ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் முதல் பாடல் ' கோல்டன் ஸ்பெரோ' வருகின்ற ஆகஸ்ட் 30ந் தேதி அன்று வெளியாகிறது. இதில் பிரியங்கா மோகன் நடனம் ஆடி உள்ளார். இப்பாடல் பற்றி எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "நீக் பட முதல் பாடலை தனுஷ் உடன் இணைந்து பார்த்தேன். பிரியங்கா மோகன் ஸ்டைல் ஆக நடனம் ஆடியுள்ளார். தனுஷ் இந்த பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியுள்ளார். குறிப்பாக இந்த பாடலை தனுஷின் மூத்த மகன் யாத்ரா எழுதியுள்ளார். அற்புதமாக எழுதியுள்ளார்" என பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.