இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? |

ஷோபா சந்திரசேகர், இன்றைய முன்னணி நடிகர், அரசியல் தலைவர் விஜய்யின் அம்மா என்கிற அளவில்தான் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். சிலருக்கு அவர் நல்லதொரு கர்நாடக இசை பாடகி என்பது தெரியும்.
பலரும் அறியாத பல முகங்கள் அவருக்கு உண்டு. ஷோபாவின் அப்பா ஒரு இசை குழுவையும், ஒரு நாடக குழுவையும் நடத்தி வந்தார். அந்த இசை குழுவில் பாடகியாவும், நாடகத்தில் நடிகையாகவும் தனது கலை வாழ்க்கையை தொடங்கினார் ஷோபா. நாடகங்களை இயக்க வந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர். நாடகங்களுக்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா.
ஷோபாவின் தந்தையின் நாடகங்களை இயக்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகரை தனது வீட்டிலேயே தங்க வைத்தார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரை அவருக்கு மிகவும பிடித்துப்போகவே தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது ஷோபாவுக்கு வயது 17. அடுத்த வருடமே விஜய்யை பெற்றெடுத்தார். ஷோபா இந்து, சந்திரசேகர் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
ஆனாலும் ஷோபாவுக்கு நடிப்பதை விட பாடுவதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் பெரிய குருமார்களிடம் முறைப்படி இசை கற்றார். வீணை இசைக்க கற்றார். திருமணமான புதிதில் எஸ்.ஏ.சந்திரேசகர் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது ஷோபாவின் பாடல் வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது.
பின்னாளில் பாடகி, வீணை இசை கலைஞர் என்பதோடு இன்னிசை மழை, நண்பர்கள் என்ற இரண்டு படங்களையும் இயக்கினார். 13 படங்களுக்கு கதை எழுதினார், 9 படங்களை தயாரித்தார். இப்படி சகலகலாவல்லியாக இருந்த ஷோபா சந்திரசேகருக்கு இன்று 67வது பிறந்தநாள்.




