புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஷோபா சந்திரசேகர், இன்றைய முன்னணி நடிகர், அரசியல் தலைவர் விஜய்யின் அம்மா என்கிற அளவில்தான் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். சிலருக்கு அவர் நல்லதொரு கர்நாடக இசை பாடகி என்பது தெரியும்.
பலரும் அறியாத பல முகங்கள் அவருக்கு உண்டு. ஷோபாவின் அப்பா ஒரு இசை குழுவையும், ஒரு நாடக குழுவையும் நடத்தி வந்தார். அந்த இசை குழுவில் பாடகியாவும், நாடகத்தில் நடிகையாகவும் தனது கலை வாழ்க்கையை தொடங்கினார் ஷோபா. நாடகங்களை இயக்க வந்தவர்தான் எஸ்.ஏ.சந்திரசேகர். நாடகங்களுக்கு பின்னணி இசை அமைத்தவர் இளையராஜா.
ஷோபாவின் தந்தையின் நாடகங்களை இயக்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகரை தனது வீட்டிலேயே தங்க வைத்தார். பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரை அவருக்கு மிகவும பிடித்துப்போகவே தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். அப்போது ஷோபாவுக்கு வயது 17. அடுத்த வருடமே விஜய்யை பெற்றெடுத்தார். ஷோபா இந்து, சந்திரசேகர் கத்தோலிக்க கிறிஸ்தவர்.
ஆனாலும் ஷோபாவுக்கு நடிப்பதை விட பாடுவதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் பெரிய குருமார்களிடம் முறைப்படி இசை கற்றார். வீணை இசைக்க கற்றார். திருமணமான புதிதில் எஸ்.ஏ.சந்திரேசகர் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது ஷோபாவின் பாடல் வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது.
பின்னாளில் பாடகி, வீணை இசை கலைஞர் என்பதோடு இன்னிசை மழை, நண்பர்கள் என்ற இரண்டு படங்களையும் இயக்கினார். 13 படங்களுக்கு கதை எழுதினார், 9 படங்களை தயாரித்தார். இப்படி சகலகலாவல்லியாக இருந்த ஷோபா சந்திரசேகருக்கு இன்று 67வது பிறந்தநாள்.