நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற காமெடி நடிகர்கள் காலத்தை கடந்தும் பேச வைப்பார்கள். ஆனால் சின்ன சின்ன கேரக்டரில் பெரிதாக சிரிக்க வைத்துச் சென்ற காமெடியன்களை சினிமா மறந்து விடும். அப்படியானவர்களில் ஒருவர்தான் என்னத்த கண்ணையா.
இன்றைய தலைமுறைக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் 'தொட்டால் பூ மலரும்' படத்தில் வடிவேலுவுக்கு கார் டிரைவராக வந்து 'வரும் ஆனா... வராது' என்ற டயலாக் மூலம் புகழ்பெற்றாரே அவர் தான் என்னத்த கண்ணையா. அந்த காலத்திலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் காமெடியனாக நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு பிடித்த காமெடியனாக இருந்தார். இதனால் தனது படங்களில் ஒரு காட்சியாவது கொடுத்து கை நிறைய சம்பளமும் கொடுப்பார். பின்னாளில் கலைமாமணி பட்டமும் கொடுத்தார்.
1949ல் பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் இணைந்து நடித்த 'ரத்னகுமார்' படத்தில் கூட்டத்தில் ஒருவராக வந்தார் கண்ணையா. இதுதான் அவர் அறிமுகமான படம். 1950ல் வெளியான 'ஏழை படும் பாடு' படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்து தன்னை அடையாளப்படுத்தினார். 1955ல் இருந்து சென்னைக்கு வந்து நிரந்தரமாகத் தங்கினார்.
இவர் பெயருக்கு முன்னால் 'என்னத்த' வந்தது தனி கதை. 1967ல் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான படம் 'நான்'. இந்தப்படத்தில் கண்ணையா எதற்கெடுத்தாலும் விரக்தியாக “என்னத்த வந்து... என்னத்த போயி...”ன்னு சொல்லிக்கொண்டே இருப்பார். இதுதான் அவரது பெயர் காரணமானது.