ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சூர்யா நடிப்பில் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‛வாடிவாசல்'. ஆனால் சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதம் ஆகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார்.
அவர் கூறுகையில், “கடந்த மாதம் நானும், வெற்றிமாறனும், சூர்யாவும் இணைந்து வாடிவாசல் படத்தின் பணிகளை குறித்து பேசினோம். தற்போது இப்படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளோம். இதற்காக மதுரையில் அலுவலகம் அமைந்துள்ளோம். 3 நாட்கள் படப்பிடிப்பு எடுத்து இதில் இருக்கும் கஷ்டத்தை உணர்ந்தோம். இதையடுத்து லண்டனில் உள்ள ஜூராசிக் பார்க் படத்தை எடுக்க உறுதுணையாக இருந்த கலைஞர் ஒருவரிடம் பேசியுள்ளோம். அதற்காக தான் காலதாமதம் ஆகி வருகிறது. வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” என்றார்.