அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாடகி பி. சுசீலா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இசையரசி P.சுசீலாம்மா , சிகிச்சைக்கு பின் இப்போது நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில், காவேரி மருத்துவமனையில் மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பி.சுசீலா தெரிவித்துள்ளார்.




