சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
கன்னட திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக அறிமுகமான கிரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்ததுடன் ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று போனதால் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சார்லி 777 மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான பேச்சுலர் பார்ட்டி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகராக மாறி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் பேச்சுலர் பார்ட்டி என்கிற படம் வெளியானது.
இந்தப் படத்தை இவரே தயாரித்தும் இருந்தார். அர்ஜூன் ராமு என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஏற்கனவே வெளியான நியாய எல்லிடே மற்றும் காலிமாத்து ஆகிய படங்களில் இடம் பெற்ற பாடல்களை தங்களது அனுமதி இல்லாமல் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பதாக எம்ஆர்பி மியூசிக் என்கிற நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில் சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ரக்ஷித் ஷெட்டி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து எம்ஆர்பி மியூசிக் நிறுவனத்தின் அனுமதியின்றி அவர்களது பாடல்களை ரக்ஷித் ஷெட்டி பயன்படுத்தியதை விசாரணையில் உறுதி செய்த நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டு தொகையாக இருபது லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த ஜூலை 15ம் தேதி, இந்த பிரச்சனை குறித்து ஆ சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த பதிவில் சில நொடிகள் இசையை பயன்படுத்தியதற்காக எம்ஆர்பி மியூசிக் நிறுவனம் அதிகபட்ச தொகை கேட்பதாக விமர்சித்திருந்தார். அந்த பதிவையும் அவர் நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.