பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
கடந்த மாதத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஸ்யப், நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த பிறகும் மகாராஜா படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு அளித்தனர். உலகளவில் இன்னும் அதிக கவனத்தை ஈர்த்தது மகாராஜா திரைப்படம். இந்த நிலையில் தற்போது மெல்போர்னில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்திய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை மகாராஜா படத்தை இயக்கியதற்காக நிதிலனுக்கு வழங்குவதாக விருது குழு அறிவித்துள்ளனர்.