'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ரஜினிகாந்தும் 25 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹீரோவாக உருவாவதற்கு எஸ்.பி.முத்துராமன் பெரிய காரணமாக இருந்தார். ஒரு நாள் எஸ்.பி.முத்துராமனை ரஜினி அழைத்து “என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய துணையா இருந்தீங்க. நான் பொருளாதாரத்துல பெரிய அளவிற்கு முன்னுக்கு வந்து விட்டேன். ஆனால் நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணுமோ கேளுங்க” என்றார்.
அதற்கு எஸ்.பி.முத்துராமன் “என்னோட முதல் படத்துலேருந்து கடைசி படம் வரைக்கும் என்னோடு ஒரே டீம்தான் வேலை செய்றாங்க. என்னை மாதிரிதான் அவுங்களும் இருக்காங்க. அப்படி நீங்க ஏதாவது செய்றதாக இருந்தா என்னோட டீமுக்கே செய்யணும்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட ரஜினி, எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம்தான் 'பாண்டியன்'.
இந்த படத்தின் லாபம், எஸ்.பி.முத்துராமனின் குழுவினருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இதனால் சொந்த வீடு, அடிப்படை வாழ்வாதாரம் கிடைத்தது.