தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், ரஜினிகாந்தும் 25 படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். ரஜினிகாந்த் கமர்ஷியல் ஹீரோவாக உருவாவதற்கு எஸ்.பி.முத்துராமன் பெரிய காரணமாக இருந்தார். ஒரு நாள் எஸ்.பி.முத்துராமனை ரஜினி அழைத்து “என்னுடைய வளர்ச்சிக்கு பெரிய துணையா இருந்தீங்க. நான் பொருளாதாரத்துல பெரிய அளவிற்கு முன்னுக்கு வந்து விட்டேன். ஆனால் நீங்க இன்னும் அப்படியேதான் இருக்கீங்க உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசைப்படுறேன். என்ன வேணுமோ கேளுங்க” என்றார்.
அதற்கு எஸ்.பி.முத்துராமன் “என்னோட முதல் படத்துலேருந்து கடைசி படம் வரைக்கும் என்னோடு ஒரே டீம்தான் வேலை செய்றாங்க. என்னை மாதிரிதான் அவுங்களும் இருக்காங்க. அப்படி நீங்க ஏதாவது செய்றதாக இருந்தா என்னோட டீமுக்கே செய்யணும்” என்றார். அதை ஏற்றுக் கொண்ட ரஜினி, எஸ்.பி.முத்துராமன் குழுவிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படம்தான் 'பாண்டியன்'.
இந்த படத்தின் லாபம், எஸ்.பி.முத்துராமனின் குழுவினருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இதனால் சொந்த வீடு, அடிப்படை வாழ்வாதாரம் கிடைத்தது.