ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷிற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், அவர் நடிக்கும் எந்த சீரியலிலும் முழுவதுமாக நடித்துக் கொடுக்காமல் பாதியிலேயே ஏதோ சில காரணங்களால் வெளியேறி விடுகிறார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில், மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்த திவ்யா கணேஷ், அந்த சீரியலை விட்டும் சில தினங்களுக்கு முன் விலகிவிட்டார். இதுகுறித்து பலரும் கேள்விகள் கேட்க, இன்ஸ்டாகிராமில் தற்போது திவ்யா கணேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், 'நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சீரியல் குழுவினர் எனக்கு பதிலாக வேறு நடிகையை தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி' என கூறியுள்ளார்.




