ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பெரிய அளவில் வெளியிட படத்தை வாங்கியுள்ள அந்தந்த வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்களாம். தமிழக உரிமையை வாங்கியுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பட வெளியீடு பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல், “அந்த ஏரியா, இந்த ஏரியா, ஆல் ஏரியாஸ் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் அனைத்துத் தியேட்டர்களிலும் செப்டம்பர் 5 முதல் 'தி கோட்' படம் திரையிடப்படுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் படத்தின் ஆரம்ப நாட்களின் வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் படத்திற்கான சிறப்புக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகளின் முன்பதிவும் ஆரம்பமாகியுள்ளது.