பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
நடிகர் பஹத் பாசில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது தனக்கு ஏடிஹெச்டி எனப்படும் பாதிப்பு இருப்பதாக ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். 41 வயதில் தான் தனக்கு இது தெரிய வந்ததாகவும் சிறுவயதிலேயே இதை கண்டறிந்திருந்தால் எளிதில் குணப்படுத்தி இருக்கலாம் என்று மருத்துவர் கூறியதாகவும் கூறினார். தற்போது அதே போல பிரபல மலையாள வில்லன் நடிகராக ஷைன் டாம் சாக்கோ தானும் இதே போல ஏடிஹெச்டி பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தெலுங்கில் தசரா உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான ஷைன் டாம் சாக்கோ அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களைப் பேசி சர்ச்சைகளில் சிக்குபவர். சமீபத்தில் கூட தனது காதலியுடன் பிரேக்கப் ஆகிவிட்டது என்று கூறி அதிர்ச்சி அளித்தார். பெரும்பாலும் இவர் தன்னை பற்றி மீடியாக்களில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இப்படி பேசி வருகிறார் என்று சொல்லப்படுவது உண்டு. இந்த நிலையில் தான் கவனக்குறைவு மற்றும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்கிற தாக்கத்தை ஏற்படுத்தும் ஏடிஹெச்ச்டி பாதிப்புக்கு தான் ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
ஆனால் இதை பாசிட்டிவான கோணத்தில் அணுகியுள்ள அவர், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் இது ஒரு பாதிப்பு என்பது போல தெரியும். ஆனால் எனக்கு இது உண்மையிலேயே ஒரு பயனுள்ள விஷயம்தான். கறை நல்லது என்று சிலர் சொல்வார்களே இதுவும் அதுபோலத்தான் என்று கூறியுள்ள அவர் இந்த பாதிப்பு உடையவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ரொம்பவே முயற்சிப்பார்கள் என்றும் கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் இருப்பதை தவிர்த்து வெளிப்புறங்களிலேயே இருப்பதற்கு விரும்புவார்கள் என்றும் அது போன்ற தாக்கம் தனக்கும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.