Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்புதான் என் உயிர், ஒருபோதும் அதிலிருந்து விலக மாட்டேன் : விக்ரம் நெகிழ்ச்சி பேச்சு

06 ஆக, 2024 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Acting-is-my-life,-I-will-never-leave-it:-Vikram

விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். வருகிற 15ம் தேதி வெளிவருகிறது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது.

இந்த விழாவில் விக்ரம் பேசியதாவது : அந்தியன், பிதாமகன், ஐ, ராவணன் படங்களில் நான் கஷ்டப்பட்டு நடித்ததாக சொல்வார்கள். ஆனால் தங்கலான் படத்திற்கு நான் பட்ட கஷ்டத்தை ஒப்பிடும்போது அதெல்லாம் கஷ்டமே இல்லை. என் நடிப்பு பற்றி நானே பெருமைபட்டுக் கொள்ள மாட்டேன். ஷங்கர், மணிரத்னம், தரணி, பா.ரஞ்சித், ஏ.எல்.விஜய் மாதிரியான இயக்குனர்கள் என் நடிப்பை கொண்டு வந்தார்கள். அந்த பெருமை அவர்களையே சாரும்.
நடிப்புதான் என் உயிர். பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் முதல் 3 ரேங்குகளுக்குள் இருந்தேன். நடிப்பு ஆசை வந்த பிறகு கடைசி 3 ரேங்கிற்குள் வந்தேன். பள்ளி, கல்லூரியில் நாடகங்களில் நடித்து நடிப்பு வெறியை தணித்தேன். வீட்டில் உள்ளவர்கள் நடிப்பை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த சொன்னார்கள்.

விபத்தில் சிக்கினேன் கால் முறிந்தது, 23 இடத்தில் ஆபரேஷன், 3 வருடம் படுக்கையில் கிடந்தேன். என்னால் இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். காலை துண்டிக்காமல் விட்டதே பெரிய விஷயம் என்றார்கள். ஆனால் நான் தளரவில்லை இரண்டு குச்சி ஊன்றி நடந்தேன், அப்புறம் ஒரு குச்சி ஊன்றி நடந்தேன். பின்னர் காலால் நடந்தேன். அடுத்த நிமிடமே சினிமா வாய்ப்பு தேடினேன். வீட்டு செலவுக்காக கிடைத்த வேலைகளுக்கு சென்றேன்.

10 வருட போராட்டத்திற்கு பிறகுதான் சினிமா என் கைக்கு வந்தது. அன்றைக்கு நான் தளர்ந்திருந்தால், முயற்சியை கைவிட்டிருந்தால் இன்றைக்கு இந்த மேடையில் நின்று கொண்டிருக்க மாட்டேன். ஒரு லட்சியத்தை அடையவேண்டும் என்றால் அதை நோக்கிய பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வேளை நான் சினிமாவில் ஜெயித்திருக்காவிட்டால் இன்னும் வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்திருப்பேன். ஒரு போதும் நடிப்பில் இருந்து விலகி இருக்க மாட்டேன்.

பொதுவாக ஒரு கதையை எழுதிவிட்டு இந்த கேரக்டரில் நடியுங்கள் என்றுதான் இயக்குனர்கள் என்னிடம் வருவார்கள். ஆனால் முதன் முறையாக எனக்காக எழுதப்பட்ட கேரக்டர்தான் தங்கலான். இதில் நான் நடிக்க முக்கிய காரணம் நான்தான் தங்கலான். எனக்குள் இருந்த போர்குணம், விடா முயற்சி, வெறி எல்லாமே தங்கலானுக்கும் இருந்தது. உடன் இருந்தவர்கள் அவனை உன்னால் முடியாது விட்டுவிடு என்று சொன்ன போதும் தங்கலான் தொடர்ந்து போராடினான். தன் மக்களுக்காக தன் குடும்பத்துக்காக போராடினான். என்னையே அவர் எதிரொலித்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛கொட்டுக்காளி' உண்மைக்கு நெருக்கமான படம் : சூரி நெகிழ்ச்சி‛கொட்டுக்காளி' உண்மைக்கு ... 'அந்தகன்' படப்பிடிப்பில் சமுத்திரகனியை கெட்டவார்த்தையால் திட்டிய வனிதா 'அந்தகன்' படப்பிடிப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in