நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் |
தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. 'கற்றது தமிழ், அங்காடித் தெரு, அரவான், இறைவி, தரமணி' ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களும், நடிப்பும் பேசப்பட்டது. இது போலவே தெலுங்கிலும் சில படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
தற்போது தமிழில் அவர் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படமும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் 'பாஹிஷ்கரனா' என்ற வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார் அஞ்சலி. அதில் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். அப்படியான காட்சிகளில் நடிப்பதே கடினம் எனக் கூறியுள்ள அஞ்சலி, “குழுவில் உள்ள பல ஆண்களுக்கு மத்தியில் அப்படியான காட்சிகளிலில் நடிக்க வேண்டியிருக்கும். அப்படியான ஒரு சூழலை எதிர் கொண்டு நடிப்பது சிரமமான ஒன்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.