துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' |
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சைத்ரா ஆச்சார். 'மஹிரா' படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'சப்த சகர்தாச்சே எலோ' படத்தின் ரக்ஷித் ஷெட்டியுடன் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை ஆனார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சித்தார்த் ஜோடியாக அவரது 40வது படத்திலும், ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களின் மூலம் இங்கு அழுத்தமாக கால் பதிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி படங்களில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு சித்தார்த் படத்துக்கு அழைத்தார்கள். இந்தப் படத்தில் மார்ச் மாதம் ஒப்பந்தம் ஆனேன். அதை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எப்போதும் என் நடிப்பு பேசப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் இந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன் என்னால் தமிழைப் புரிந்து கொள்ள முடியும். இப்போது படப்பிடிப்பில் தொடர்ந்து பேசி வருவதால் என்னால் நன்றாக பேச முடிகிறது. என்றார் சைத்ரா.