சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சைத்ரா ஆச்சார். 'மஹிரா' படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'சப்த சகர்தாச்சே எலோ' படத்தின் ரக்ஷித் ஷெட்டியுடன் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை ஆனார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சித்தார்த் ஜோடியாக அவரது 40வது படத்திலும், ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களின் மூலம் இங்கு அழுத்தமாக கால் பதிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி படங்களில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு சித்தார்த் படத்துக்கு அழைத்தார்கள். இந்தப் படத்தில் மார்ச் மாதம் ஒப்பந்தம் ஆனேன். அதை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எப்போதும் என் நடிப்பு பேசப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் இந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன் என்னால் தமிழைப் புரிந்து கொள்ள முடியும். இப்போது படப்பிடிப்பில் தொடர்ந்து பேசி வருவதால் என்னால் நன்றாக பேச முடிகிறது. என்றார் சைத்ரா.