ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சைத்ரா ஆச்சார். 'மஹிரா' படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'சப்த சகர்தாச்சே எலோ' படத்தின் ரக்ஷித் ஷெட்டியுடன் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை ஆனார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் சித்தார்த் ஜோடியாக அவரது 40வது படத்திலும், ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களின் மூலம் இங்கு அழுத்தமாக கால் பதிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி படங்களில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு சித்தார்த் படத்துக்கு அழைத்தார்கள். இந்தப் படத்தில் மார்ச் மாதம் ஒப்பந்தம் ஆனேன். அதை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எப்போதும் என் நடிப்பு பேசப்பட வேண்டும் என்று நினைப்பேன். அதுதான் இந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன் என்னால் தமிழைப் புரிந்து கொள்ள முடியும். இப்போது படப்பிடிப்பில் தொடர்ந்து பேசி வருவதால் என்னால் நன்றாக பேச முடிகிறது. என்றார் சைத்ரா.