வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

வாரிசு நடிகர்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. எல்லா காலத்திலும் உண்டு. அதில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் தோல்வி அடைகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் பி.யு.சி ராஜா பகதூர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவர் காலத்தில் அவருக்கு எதிர் களத்தில் நின்றவர் பி.யு.சின்னப்பா. தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ. அவரது மகன் தான் பி.யு.சி.ராஜா பகதூர்.
திரையுலகின் உச்சியில் இருந்த பி.யு.சின்னப்பா மறைவிற்கு பிறகு அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் நடிக்க வந்தார் பி.யு.சி ராஜா பகதூர். சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த “வாழ வைத்த தெய்வம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'கோயில் புறா' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நாதஸ்வர வித்வானாக நடித்தார். இதைத் தொடர்ந்து வில்லன் வேடங்களில் வாயில்லாப்பூச்சி, ஒரு குடும்பத்தின் கதை, சிவாஜி நடித்த 'தியாகி' போன்ற படங்களில் நடித்தார்.
அதன்பிறகு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குபிறகு 'கரகாட்டக்காரன்' படத்தில் மட்டன் கடை நடத்துகிறவராக, அதாவது வில்லனாக நடித்தார். அதன்பிறகு சிறிய கேரக்டர்களில் நடித்தார். சிலகாலம் டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.
பின்னர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் நோயுற்று காலமானார். கடைசிவரை அவர் ஆசைப்பட்டதெல்லாம் ஒரு படத்திலாது ஹீரோவாக நடித்து அது வெற்றி பெற வேண்டும் என்பதே. அது கடைசிவரை நிறைவேறால் போனது.




