நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சென்னை : கார்த்தி நடித்து வரும் ‛சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து 2022ல் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்'. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாவதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 20 அடி உயரத்தில் இருந்து சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார். இதில் மார்பு பகுதியில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து சென்னை, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.