''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சென்னை : கார்த்தி நடித்து வரும் ‛சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து 2022ல் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்'. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் உருவாவதாக அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று படத்தின் சண்டைக்காட்சிகளை படமாக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் 20 அடி உயரத்தில் இருந்து சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்தார். இதில் மார்பு பகுதியில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து சென்னை, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.