அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 | அஜித்துக்கு பத்மபூஷண்…. வாழ்த்துவதில் ஏன் பாரபட்சம்…. | பிளாஷ்பேக்: சாதுர்யமிக்க இயக்கத்தால் சாதனை படைத்த “சாந்த சக்குபாய்” | விஜய்யின் கடைசி படம் ‛ஜனநாயகன்': பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி |
தமிழ், தெலுங்கில் பிரபலமாக உள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். கடந்த பிப்ரவரியில் தயாரிப்பாளர், நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கானாவில் போதை பொருள் விற்பனை செய்ததாக ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உள்ளிட்ட 5 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2.6 கி.கி. கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தவிர அமன் ப்ரீத் சிங்கிடம் இருந்து கோகைன் போதை பொருளை வாங்க வந்த 30 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.