என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு ‛பவன்' என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
தனது இல்லத்தில் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டும் விழா தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் தனது மூன்று குழந்தைகள் பெயரான Aaradhana - Gugan - PAVAN என குறிப்பிட்டு ஹார்ட்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.