வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை, முரளி நடித்த உன்னுடன், விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல மலையாள தயாரிப்பாளரான அரோமா மணி. 65 வயதான இவர் நேற்று தனது இல்லத்தில் திடீரென மரணத்தை தழுவியுள்ளார். மலையாளத்தில் அதிக அளவில் படங்களை தயாரித்துள்ள இவர் கிட்டத்தட்ட தமிழையும் சேர்த்து 60 படங்களை தயாரித்து உள்ளார். ஒரு இயக்குனராக ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு பக்கம் திங்களாழ்ச்ச நல்ல திவசம், தூரே தூரே ஒரு கூடு கூட்டாம் என அடுத்தடுத்த வருடங்களில் தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்த இவர் இன்னொரு பக்கம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு, இருபதாம் நூற்றாண்டு, கமிஷனர் எப்ஐஆர் உள்ளிட்ட கமர்சியல் படங்களையும் தயாரித்து வெற்றி பெற்றார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, திலீப், சுரேஷ்கோபி, பிரித்விராஜ் என பலருடைய படங்களையும் தயாரித்துள்ளார்.
குறிப்பாக மம்முட்டிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அவரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தை தயாரித்து அதன் 5 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாக வித்திட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2013ல் பஹத் பாசில் நடித்த ஆர்டிஸ்ட் என்கிற படத்தை தயாரித்ததுடன் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




