நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
தமிழில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை, முரளி நடித்த உன்னுடன், விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல மலையாள தயாரிப்பாளரான அரோமா மணி. 65 வயதான இவர் நேற்று தனது இல்லத்தில் திடீரென மரணத்தை தழுவியுள்ளார். மலையாளத்தில் அதிக அளவில் படங்களை தயாரித்துள்ள இவர் கிட்டத்தட்ட தமிழையும் சேர்த்து 60 படங்களை தயாரித்து உள்ளார். ஒரு இயக்குனராக ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு பக்கம் திங்களாழ்ச்ச நல்ல திவசம், தூரே தூரே ஒரு கூடு கூட்டாம் என அடுத்தடுத்த வருடங்களில் தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்த இவர் இன்னொரு பக்கம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு, இருபதாம் நூற்றாண்டு, கமிஷனர் எப்ஐஆர் உள்ளிட்ட கமர்சியல் படங்களையும் தயாரித்து வெற்றி பெற்றார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, திலீப், சுரேஷ்கோபி, பிரித்விராஜ் என பலருடைய படங்களையும் தயாரித்துள்ளார்.
குறிப்பாக மம்முட்டிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அவரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தை தயாரித்து அதன் 5 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாக வித்திட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2013ல் பஹத் பாசில் நடித்த ஆர்டிஸ்ட் என்கிற படத்தை தயாரித்ததுடன் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.