சித்ராவுடன் இணைந்து ஓணம் கொண்டாடிய பின்னனி பாடகிகள் | ரீ ரிலீஸில் 50-வது நாளை தொட்ட மோகன்லாலின் தேவதூதன் | டொவினோ தாமஸ் பட டிரைலரை வியந்து பாராட்டிய பிரசாந்த் நீல் | ஆதாரத்துடன் நிவின்பாலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை | விடுதலை-2 ; தியேட்டரில் பாதி.. ஓடிடியில் மீதி? | வயநாடு நிவாரண பணியில் ஈடுபட்ட வீரர்களை கவுரவித்த மஞ்சு வாரியார்-டொவினோ தாமஸ் | மிஸ்டர் டிடக்ட்டிவ் ஆக மம்மூட்டி? | சத்தமில்லாமல் நடக்கும் ராஜூ முருகன் - சசிகுமார் படப்பிடிப்பு | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்! | 'தி கோட்' படத்திற்கு எதிராக இத்தனை சினிமா அரசியலா? |
தமிழில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை, முரளி நடித்த உன்னுடன், விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல மலையாள தயாரிப்பாளரான அரோமா மணி. 65 வயதான இவர் நேற்று தனது இல்லத்தில் திடீரென மரணத்தை தழுவியுள்ளார். மலையாளத்தில் அதிக அளவில் படங்களை தயாரித்துள்ள இவர் கிட்டத்தட்ட தமிழையும் சேர்த்து 60 படங்களை தயாரித்து உள்ளார். ஒரு இயக்குனராக ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு பக்கம் திங்களாழ்ச்ச நல்ல திவசம், தூரே தூரே ஒரு கூடு கூட்டாம் என அடுத்தடுத்த வருடங்களில் தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்த இவர் இன்னொரு பக்கம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு, இருபதாம் நூற்றாண்டு, கமிஷனர் எப்ஐஆர் உள்ளிட்ட கமர்சியல் படங்களையும் தயாரித்து வெற்றி பெற்றார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, திலீப், சுரேஷ்கோபி, பிரித்விராஜ் என பலருடைய படங்களையும் தயாரித்துள்ளார்.
குறிப்பாக மம்முட்டிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அவரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தை தயாரித்து அதன் 5 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாக வித்திட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2013ல் பஹத் பாசில் நடித்த ஆர்டிஸ்ட் என்கிற படத்தை தயாரித்ததுடன் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.