நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார். 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். பூஜா ஹெக்டே, ஜெய்ராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வந்து முடிவடைந்தது.
ஏற்கனவே இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் உறியடி விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. இதில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை 8 நாட்கள் படமாக்கியுள்ளனர். இந்த நிலையில் சில பிரச்னைகளால் இப்படத்தை விட்டு விஜயகுமார் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.