சீரியல் நடிகையை காதலித்து கரம்பிடித்த வீஜே அஷ்வத் | அனிதா சம்பத்தை ஏமாற்றிய ஆன்லைன் நிறுவனம் | 'ஈகை'யில் சட்ட மாணவி சந்திக்கும் பிரச்னைகள் | ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது : சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுகிறது | வெளிநாடு செல்வதை தடுக்க அதுல்யாவின் பாஸ்போர்ட்டை திருடிய பணிப்பெண் | சபரிமலையை தொட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள்: சுரேஷ் கோபி | வரலட்சுமியின் திருமண வரவேற்பு : முதல்வர், திரைப்பிரபலங்கள் நேரில் வாழ்த்து | நாளை ஜூலை 5 முதல் 'கூலி' படப்பிடிப்பு | மகாராஜா - விஜய் சேதுபதியின் முதல் ரூ.100 கோடி படம் | இந்தியன் 2 கதை இந்தக் காலத்திற்கும் பொருந்தும் - ஷங்கர் |
முத்தமிழ் படைப்பகம் சார்பில் ஏ.ஜே.பிரபாகரன் தயாரிக்கும் படம் 'சிங்காநல்லூர் சிக்னல்'. அறிமுக இயக்குநர் ஜே.எம்.ராஜா இயக்குகிறார். பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஹரிசங்கர், ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. படம் பற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது : ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான பேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறோம். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை கோவையில் நடக்கிறது என்றார்.