என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்ற பிறகு ஆஸ்கரின் கவனம் இந்திய சினிமாவின் பக்கம் திரும்பியது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய கலைஞர்களும் ஆஸ்கர் விருது பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளை தீர்மானிக்கும் ஆஸ்கர் அகாடமி கமிட்டியில் தற்போது 487 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
புதிய உறுப்பினர் பட்டியலில் இயக்குனர் ராஜமவுலி, நடிகை ஷபனா ஆஸ்மி, 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரஷீத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் ராஜமவுலி மனைவி ரமா, ரிமா தாஸ் உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற 19 பேரும், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேரும் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
புதிய உறுப்பினர்களையும் சேர்த்து ஆஸ்கார் அகாடமியில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் 56 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.