ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத ஸ்ரீஹரி என்ற இளைஞர் 'சூரியனும் சூரிய காந்தியும்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியுள்ளார். இந்த படத்தை டி.டி.சினிமா ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.ராஜா மற்றும் டெய்லி குருஜி இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.ராஜா இயக்கி உள்ளார். ரிதி உமையாள் நாயகியாக நடித்துள்ளனர். அப்புகுட்டி, விக்ரம் சுந்தர், சந்தான பாரதி, செந்தில்நாதன், ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு உள்பட பலர் நடித்துள்ளனர். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.எஸ்.ரவிபிரியன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறும்போது “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியாரின் பாடலே கதையின் மைய கரு. சூரியன் மேல் கொண்ட சூரியகாந்தி பூவின் காதலை போல ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அந்த காதலுக்குள் ஜாதி என்கிற பேய் நுழைந்து என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் கதை” என்றார்.
ஏற்கெனவே கேட்பு திறன், பேசும் திறன் இல்லாத அபிநயா ‛நாடோடிகள்' படத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.