‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு |
தமிழ் கடவுள் முருகனின் வரலாற்றை சொல்லும் ஸ்ரீவள்ளி, கந்தன் கருணை மாதிரியான புராண படங்கள் ஒரு காலத்தில் வெளிவந்தது. அதன் பிறகு முருகனின் பெருமைகளை பேசும் 'வருவான் வடிவேலன்' மாதிரியான சமூக படங்கள் வந்தது. சின்னத்திரையில் புராண மற்றும் பக்தி தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியதும் பக்தி படங்கள் வருவது நின்று போனது.
இந்த நிலையில பல ஆண்டுகளுக்கு பிறகு 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் ஒரு படத்தை ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கிறார்.
இவர் தீவிர அரசியல்வாதியாக இருந்து பின்னர் ஆன்மிக ஈடுபாடு கொண்டு முருக பக்தர் ஆனவர். முருக கடவுளின் பெயரில் காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை 'தெய்வக் குழந்தைகள்' என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
“நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தை தயாரிக் உள்ளேன். இதற்காக பல முருக பக்தர்களை சந்தித்து அவர்கள் வாழ்க்கையில் முருகன் கொடுத்த அற்புதங்களை சேகரித்து அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும்” என்கிறார் கோபி.