Advertisement

சிறப்புச்செய்திகள்

திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் | மகளின் குற்றச்சாட்டு : கண்ணீர் விட்டு அழுத நடிகர் பாலா | சவ்பின் சாஹிரின் மிகப்பெரிய ரசிகன் நான் : அரவிந்த்சாமி | 'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி'' நடிகர்கள் வாய் திறந்தனர் : முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம்

21 ஜூன், 2024 - 03:50 IST
எழுத்தின் அளவு:
Finally-Suriya,-parthiban-breaks-silence-on-Kallakurichi-incident

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 'கள்ள மவுனம்' காத்து வந்த 'போராளி' நடிகர்களில் இன்று (ஜூன் 21) நடிகர்கள் சூர்யா, பார்த்திபன் ஆகியோர் கள்ள மவுனத்தை களைத்து கருத்துக்கூற வாய் திறந்துள்ளனர்.

போராளிகள் போல் காட்டிக்கொள்ளும் சில சினிமா நடிகர்கள், இனம், மொழி, ஜாதி பற்றியெல்லாம் பேசி, அரசுகளை விமர்சிப்பது வழக்கம். அதிலும், இவர்களிடம் சிக்குவது அதிமுக, பாஜ அரசுகள் தான். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்கள் எதற்கும் கருத்து சொல்லாமல் காணாமல் போய்விடுவர். தற்போது தமிழகத்தையே உலுக்கியுள்ள கள்ளச்சாராய மரணம் பற்றி இந்த போராளி நடிர்கள் இரண்டு நாட்களாக எதுவும் பேசாமல் ‛‛கள்ள மவுனம்'' காத்தனர்.

இவர்களைக் கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசி தள்ளினர். இது தொடர்பாக தினமலர் டாட் காமில் ''கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?'' என்ற தலைப்பில் நேற்று (ஜூன் 20) செய்தி வெளியிட்டோம்.

பார்த்திபன்
அதன்பிறகு ஒவ்வொருவராக தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வபோது ஏதாவது சமூக கருத்துகளை தெரிவித்து வரும் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம் ரூபாய்? என்ற ரீதியில் 'கள்ளச் சா.....வுக்கு எதுக்கு, நல்லச் சாவு (10 லட்சம்)? எனப் பதிவிட்டுள்ளார்.



இவ்வளவு தான் அவர் சொன்னது. அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கோ தமிழக அரசை கண்டிக்கவோ அவருக்கு தைரியம் இல்லை போல!

சூர்யா
அதேபோல், நடிகர் சூர்யாவும் இரண்டு நாள் மவுன விரதத்திற்குப் பிறகு, தமிழக ஆட்சி நிர்வாகத்தை கண்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இது பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

வாழ்வை மேம்படுத்துவார்கள் என நம்பி ஓட்டளிக்கும் தமிழக மக்களை, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கிற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 'மதுவிலக்கு கொள்கை' என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.



அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

பெயரை குறிப்பிடவில்லை
அறிக்கையில் சூர்யா, ‛‛ஆட்சி நிர்வாகத்தை'' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளாரே தவிர, 'ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி'' அல்லது ‛‛திமுக அரசு'' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஆட்சி நிர்வாகம் என்றாலே முதல்வர் ஸ்டாலின் நிர்வாகம் என்று நாமே புரிந்துகொள்ள வேண்டியது தான்.

முதல்வரின் பெயரையோ கட்சியின் பெயரையோ குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை என்று ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ?'லியோ'வை விட குறைவான விலையில் 'தி ... பின் வாங்கிய கமல் ? - சிம்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… பின் வாங்கிய கமல் ? - சிம்பு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in