நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்த்த சாதனையைப் புரியாமல் போய்விட்டது.
இந்தப் படத்தின் தமிழக வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்காமல் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார்கள். தமிழிலிருந்து கமல்ஹாசனை நடிக்க வைத்தார்கள். ஆனால், அவர் நடித்தாலும் தமிழக வினியோகஸ்தர்கள் இப்படத்தைக் கண்டு கொள்ளவில்லையாம்.
அவர்கள் குறிப்பிட்ட விலைக்கு படத்தை யாரும் முன் வரவில்லை என்று தகவல். ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்தால் அதிக தியேட்டர்களை போட்டுத் தருவார்கள் என அணுகினார்களாம். அவர்களோ பத்து கோடிக்கு மேல் தரவே முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
பின்னர் தெலுங்கு தயாரிப்பாளரான திருப்பதி பிரசாத் சுமார் 20 கோடிக்கு தமிழக உரிமையை வாங்கினாராம். அவர் வினியோகர்களிடம் பேசியதில் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக ஒரு யோசனையை அவர்களுக்கு சொல்லியிருக்கிறார் திருப்பதி பிரசாத்.
அதாவது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தான் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமையை 'கல்கி 2898 ஏடி' படத்தை வாங்குபவர்களுக்குத் தருகிறேன் என்றாராம். அதனால் தற்போது படத்தை வாங்க முன் வந்திருக்கிறார்களாம். பிரபாஸ் படத்தை விற்பதற்கே சிவகார்த்திகேயன் தேவைப்படுகிறார் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.