‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன் ஆகியோருடன் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்த்த சாதனையைப் புரியாமல் போய்விட்டது.
இந்தப் படத்தின் தமிழக வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்காமல் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மொழியிலும் முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தார்கள். தமிழிலிருந்து கமல்ஹாசனை நடிக்க வைத்தார்கள். ஆனால், அவர் நடித்தாலும் தமிழக வினியோகஸ்தர்கள் இப்படத்தைக் கண்டு கொள்ளவில்லையாம்.
அவர்கள் குறிப்பிட்ட விலைக்கு படத்தை யாரும் முன் வரவில்லை என்று தகவல். ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்தால் அதிக தியேட்டர்களை போட்டுத் தருவார்கள் என அணுகினார்களாம். அவர்களோ பத்து கோடிக்கு மேல் தரவே முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
பின்னர் தெலுங்கு தயாரிப்பாளரான திருப்பதி பிரசாத் சுமார் 20 கோடிக்கு தமிழக உரிமையை வாங்கினாராம். அவர் வினியோகர்களிடம் பேசியதில் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக ஒரு யோசனையை அவர்களுக்கு சொல்லியிருக்கிறார் திருப்பதி பிரசாத்.
அதாவது, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தான் தயாரிக்கும் படத்தின் வினியோக உரிமையை 'கல்கி 2898 ஏடி' படத்தை வாங்குபவர்களுக்குத் தருகிறேன் என்றாராம். அதனால் தற்போது படத்தை வாங்க முன் வந்திருக்கிறார்களாம். பிரபாஸ் படத்தை விற்பதற்கே சிவகார்த்திகேயன் தேவைப்படுகிறார் என்பதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.