சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்த விஜய்சேதுபதி அதன்பிறகு 19 (1) ஏ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தில் பெரிய வரவேற்பை தரவில்லை. என்றாலும் மலையாள படங்களின் மீதான அவரது ஆர்வமும் பிரமிப்பும் தற்போதும் குறையவில்லை.
குறிப்பாக அவர் கூறும்போது, “மலையாள திரையுலகம் தற்போது அதன் அற்புதமான காலகட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான எல்லா மலையாள படங்களையும் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் பிரேமலு திரைப்படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன். அந்த படம் ரொம்பவே இனிமை. அதில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமல்லாது நடித்த அனைவருமே அற்புதமாக பங்களிப்பு செய்திருந்தனர். அது மட்டுமல்ல மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படமும் என்னை வெகுவாக கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.