சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்த விஜய்சேதுபதி அதன்பிறகு 19 (1) ஏ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தில் பெரிய வரவேற்பை தரவில்லை. என்றாலும் மலையாள படங்களின் மீதான அவரது ஆர்வமும் பிரமிப்பும் தற்போதும் குறையவில்லை.
குறிப்பாக அவர் கூறும்போது, “மலையாள திரையுலகம் தற்போது அதன் அற்புதமான காலகட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான எல்லா மலையாள படங்களையும் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் பிரேமலு திரைப்படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன். அந்த படம் ரொம்பவே இனிமை. அதில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமல்லாது நடித்த அனைவருமே அற்புதமாக பங்களிப்பு செய்திருந்தனர். அது மட்டுமல்ல மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படமும் என்னை வெகுவாக கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.