தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
சினிமாவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும் ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அதற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் சூழல் ஒரு காலகட்டத்தில் உருவாகி விடும். இரண்டாம் பாகம் வெற்றி பெறும் போது அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க இயல்பாகவே ஆர்வம் வந்துவிடும். அப்படி தமிழில் காஞ்சனா(முனி சீரிஸ்), அரண்மனை ஆகிய படங்கள் நான்கு பாகங்களை தொட்டுவிட்ட நிலையில் தெலுங்கிலும் இதேபோல ஒரு வெற்றி படத்திற்கு மூன்றாவது பாகம் எடுக்கும் முயற்சி துவங்கியுள்ளது.
கடந்த 2019-ல் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்த எப்-2 திரைப்படம் வெளியானது. குடும்பப் பின்னணியில் காமெடி கலாட்டாவாக உருவான இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022-ல் இதன் இரண்டாம் பாகமாக எப்-3 திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் ஓரளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமாக எப்-4 படம் உருவாக இருக்கிறது என்றும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பாகங்களிலும் தொடர்ந்த அதே நட்சத்திரக் கூட்டணி தான் இந்த மூன்றாம் பாகத்திலும் இடம் பெற இருக்கிறது. இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி தான் இந்தப் படத்தையும் இயக்க உள்ளாராம்.