விரைவில் தமிழ் சினிமா ஸ்டிரைக்...? | கல்கியின் அன்னா பென் கதாபாத்திர போஸ்டர் வெளியானது | விஜய்சேதுபதியின் ரசிகராகவே மாறிப்போன ஜோஜூ ஜார்ஜ் | கருடன் வெற்றி : உன்னி முகுந்தனை தேடி வந்த பொருளாளர் பதவி | அமெரிக்காவில் 210 ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'கல்கி 2898 ஏடி' | பின் வாங்கிய கமல் ? - சிம்பு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… | அப்பாடா! ஒரு வழியாக இரு ‛‛போராளி'' நடிகர்கள் வாய் திறந்தனர் : முதல்வர் பெயரை குறிப்பிடாமல் சூர்யா கண்டனம் | 'லியோ'வை விட குறைவான விலையில் 'தி கோட்' ? | இவானா வருண் நடிக்கும் 'ராஞ்சா' | புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு தனது பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அவ்வப்போது தன்னை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள சுற்றுலா செல்லும் சமந்தா இப்போது கோவை, ஈஷா மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தியானம் செய்வது உள்ளிட்ட சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அதன் உடன், ‛‛நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்பவர்களை கண்டால் அது பாக்கியம். ஞானம் பெற நீங்கள் தான் இந்த உலகில் அதை தேட வேண்டும். உங்கள் மீது பல விஷயங்கள் திணிக்கப்படுவதால் ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல, அதற்காக உழைக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார் சமந்தா.