கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாளத்தில் மம்முட்டி, பிரித்விராஜ் இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வைசாக். அதைத் தொடர்ந்து மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய புலி முருகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து மம்முட்டியை வைத்து மதுர ராஜா, அதன் பிறகு மீண்டும் மோகன்லாலை வைத்து அலோன் ஆகிய படங்களை இவர் இயக்கினாலும் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் மம்முட்டியை வைத்து மூன்றாவதாக இவர் இயக்கிய டர்போ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 50 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லால் படத்தை தான் இயக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதியாகவே கூறியுள்ளார் வைசாக். இந்த படத்திற்கான கதை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லப்பட்டு அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டு விட்டதாம். மோகன்லால் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை முடித்ததும் இந்த வருட இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் வைசாக்.