சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அவருடைய நடிப்பு, நடனம் என அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவர் பாடும் பாடலுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது விஜய் பாடி ரசிகர்களை குஷி படுத்துவார். கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா நடித்து வெளிவந்த 'பெரியண்ணா' என்கிற படத்தில் விஜய் மூன்று பாடல்களைக் பாடியிருந்தார். அதன்பின் இப்போது தான் ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதிலும் தனது படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடியிருப்பது இன்னும் ஒரு தனிச்சிறப்பு.