எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அவருடைய நடிப்பு, நடனம் என அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும் அவர் பாடும் பாடலுக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால் அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது விஜய் பாடி ரசிகர்களை குஷி படுத்துவார். கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், சூர்யா நடித்து வெளிவந்த 'பெரியண்ணா' என்கிற படத்தில் விஜய் மூன்று பாடல்களைக் பாடியிருந்தார். அதன்பின் இப்போது தான் ஒரே படத்தில் இரண்டு பாடல்களை பாடி உள்ளார். அதிலும் தனது படத்தில் அவர் இரண்டு பாடல்கள் பாடியிருப்பது இன்னும் ஒரு தனிச்சிறப்பு.