நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
துரோகி, இறுதிச்சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். பல தேசிய விருதுகளை பெற்ற அந்த படத்தை தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுதா.
ஆனால் திடீரென்று கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணியதால் அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார் சூர்யா. இதனால் சூர்யா நடிப்பில் சுதா இயக்கயிருந்த புறநானூறு படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்து அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். இது சூர்யாவுக்காக அவர் தயார் செய்திருந்த புறநானூறு படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.