4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் | புஜ்ஜியை தேடி வந்த காந்தாரா நாயகன் | மழை பிடிக்காத மனிதனுக்கு 'யுஏ' சான்று | 16 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை திருமணம் செய்த மலையாள நடிகர் | சுறாக்கள் தாக்கியதால் ஹாலிவுட் நடிகர் மரணம் | மீண்டும் ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி : இயக்குனர் யார் தெரியுமா? |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'அமரன்'. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஓராண்டாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “கடைசி பிரேம் மற்றும் துப்பாக்கி சல்யூட்டுக்கான நேரம்” என சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பமானது. அதிக நாட்கள் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் வரை நடைபெற்றுள்ளது. சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் இப்படத்தின் தலைப்பை 'அமரன்' என அறிவித்தார்கள்.
படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் விரைவில் படம் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகலாம்.