டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற படம் ‛நாட்டாமை'. குஷ்பு, மீனா, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும்போது ஒருவர் அங்கும் நடக்கும் பிரச்னைகள் அறியாது மிக்சர் சாப்பிட்டு கொண்டிருப்பார். படத்தின் காட்சியோடு அந்த காமெடி அப்போது வரவேற்பை பெற்றது.
இந்த காமெடி இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களின் டிரெண்ட் செட்டர் என்றே சொல்லலாம். அப்படி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த மிக்சர் சாப்பிடும் நபர் யார் என்பதை 30 ஆண்டுகளுக்கு பின் சொல்லியிருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.
அவர் அளித்த ஒரு பேட்டியில் இதுபற்றி கூறும்போது, ‛‛அந்த கேரக்டராக நடித்தவர் என் படத்தில் பணியாற்றிய எலக்ட்ரீசியன். நான் இந்த நம்பர் லைட்டை ஆன் பண்ண சொன்னால் ஆன் பண்ணுவார். அடுத்த லைட்டை ஆன் செய் இல்ல ஆப் செய் என்று சொன்னால் செய்வார். அந்த இடத்தை விட்டு நகராமல் வேறு வேலை எதுவும் செய்யாமல் அங்கேயே உட்கார்ந்து இருப்பார். அதை மனதில் வைத்து அவரை அழைத்து வந்து நாட்டாமை படத்தில் ஒரு பட்டையை போட்டுவிட்டு மிக்சரை கையில் கொடுத்து வாயில் அசை போட்டப்படி நடிக்க வைத்தேன். அந்த படம் வெளியான பின் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து என்னை வீட்டில் வந்து பார்த்தார். இப்போது வரை அவரின் காட்சியை மீம்ஸ்களாக பார்த்து வருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.