குரங்கு பொம்மை - மகாராஜா கிளைமாக்ஸ் ; ஒரு ஆச்சரிய ஒப்பீடு | கமல் பயோபிக்: ஸ்ருதிஹாசன் சொன்ன "நச்" பதில் | கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி! | கருடன் பட வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!! | உயிர்த்தோழியை குப்பைத்தொட்டி ஆக்கிய ஜனனி! | கருடன் - 50 கோடியை நெருங்கும் வசூல்…ஆனாலும்… | 'கல்கி 2898 எடி' விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம் | அல்லு அர்ஜுன் - அட்லி படம் 'டிராப்'? | விஜய் பிறந்த நாளில் ‛தி கோட்' பர்த்டே ஸ்பெஷல்! வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவு |
நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த மது மந்தெனா அதிலிருந்து விலகினார். அதோடு, படத்தின் மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதனால், படத்தைத் தொடரக் கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, கடந்த வாரம் மீண்டும் ஆரம்பமான 'ராமாயணா' படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது என மும்பை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மது மந்தெனாவின் காப்பிரைட் வழக்கு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பு படப்பிடிப்பை நடத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் ரன்பீர் தேதிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ் நடிக்கும் இந்த 'ராமாயணா' படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.