ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த மது மந்தெனா அதிலிருந்து விலகினார். அதோடு, படத்தின் மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதனால், படத்தைத் தொடரக் கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, கடந்த வாரம் மீண்டும் ஆரம்பமான 'ராமாயணா' படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது என மும்பை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மது மந்தெனாவின் காப்பிரைட் வழக்கு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பு படப்பிடிப்பை நடத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் ரன்பீர் தேதிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ் நடிக்கும் இந்த 'ராமாயணா' படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.