நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

'கேஜிஎப்' படம் மூலம் பான் இந்தியா இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது 'சலார் 2' வேலைகளில் உள்ளார். இந்தப் படத்தை முடித்த பின் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்காக 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்தனர். ஆனால், ஹிந்தியில் அத்தலைப்பு இயக்குனர் கரண் ஜோஹர் வசம் இருந்தது. ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த 'பிரம்மாஸ்திரா' படத்திற்கு முதலில் 'டிராகன்' என்ற தலைப்பை வைக்க முடிவு செய்து அப்பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
தற்போது ஜுனியர் என்டிஆர் படத்திற்காக அத்தலைப்பை அவரிடம் கேட்டதும், எந்தவிதமான தொகையும் பெற்றுக் கொள்ளாமல் அத்தலைப்பை விட்டுக் கொடுத்துவிட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கனாதன் நடிக்கும் படத்திற்கும் 'டிராகன்' என்ற தலைப்பை அறிவித்துவிட்டார்கள். இத்தலைப்புக்கு ஜுனியர் என்டிஆர் படத்தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.