பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
'ஜெயிலர், வேட்டையன்' என அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் தற்போது நடித்து வரும் 'வேட்டையன்' படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அடுத்து ஜுன் மாதம் முதல் வாரத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் ரஜினிகாந்த்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. 'வேட்டையன்' படப்பிடிப்பில் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் அவர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்த பிறகே படப்பிடிப்பை வேகமாக நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னும் ரஜினிகாந்த் ஓய்வெடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'கூலி' படப்பிடிப்பிற்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாடு செல்வாரா அல்லது இங்கேயே பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.