நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய சேவை அமைப்பை தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில் அவருடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்து நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா படத்தில் நடித்தபோது நானும், லாரன்ஸூம் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் எனக்கு நண்பராக கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, மே 1ம் தேதி முதல் மாற்றம் என்ற அமைப்பை லாரன்ஸ் தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அவரது அமைப்பில் கைகோர்க்க உள்ளேன். அவர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் நிகழ்வில் அவருடன் இணைந்து, அவர் கைகாட்டும் நபர்களுக்கு உதவி செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.