என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய சேவை அமைப்பை தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில் அவருடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்து நடித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா படத்தில் நடித்தபோது நானும், லாரன்ஸூம் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் எனக்கு நண்பராக கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, மே 1ம் தேதி முதல் மாற்றம் என்ற அமைப்பை லாரன்ஸ் தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நானும் அவரது அமைப்பில் கைகோர்க்க உள்ளேன். அவர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். மே ஒன்றாம் தேதி முதல் மாற்றம் நிகழ்வில் அவருடன் இணைந்து, அவர் கைகாட்டும் நபர்களுக்கு உதவி செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.