இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டிய பிறகு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வட இந்திய திருத்தலங்களில் இந்து மக்கள் அதிகமாக வந்து வழிபடும் ஒரு கோயிலாக ராமர் கோயில் உள்ளது. அயோத்தியில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இடங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் அயோத்தியின், சரயு நதிக்கரையில் 'த சரயு என்கிளேவ்' என்ற இடத்தில் இடம் வாங்கியுள்ளாராம். ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடத் தொலைவிலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத் தொலைவிலும் அந்த இடம் அமைந்துள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் மும்பை, அலிபாக் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை 10 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். அந்த இடத்தில் சில நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே இடங்களை வாங்கியுள்ளார்களாம். அலிபாக் என்பது தீவுப் பகுதி. அங்கு அமிதாப் விரைவில் பார்ம் அவுஸ் ஒன்றை கட்டப் போகிறாராம்.