மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
இந்தியாவில் அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கம், கடத்தல் பற்றி அனைவருமே கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது பெண்களும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதையை 'பெட்டர் டுமாரோ' என்ற பெயரில் சினிமாவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
'டூ ஓவர்' படத்திற்காக பல விருதுகளை பெற்ற ஷார்வி இயக்குகிறார். மானவ், கவுரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஷார்வி கூறும்போது “அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் 'பெட்டர் டுமாரோ'. மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது. போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.