வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு |
இந்தியாவில் அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கம், கடத்தல் பற்றி அனைவருமே கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது பெண்களும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதையை 'பெட்டர் டுமாரோ' என்ற பெயரில் சினிமாவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
'டூ ஓவர்' படத்திற்காக பல விருதுகளை பெற்ற ஷார்வி இயக்குகிறார். மானவ், கவுரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஷார்வி கூறும்போது “அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் 'பெட்டர் டுமாரோ'. மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது. போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.