காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. அங்கு வில்லன்களுடன் விஜய் மோதும் பைக் சேஸிங் உள்ளிட்ட பல ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாஸ்கோவில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில், ‛‛இந்த கோட் படத்தில் மாஸ்கோவும் ஒரு முக்கிய கேரக்டரில் உள்ளது. குறிப்பாக பல இந்திய படங்கள் மாஸ்கோவில் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தில் இதுவரை இங்கு படமாக்கப்படாத பல முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அதனால் எங்களுடைய ஆடியன்சுக்கு இந்த படத்தின் மூலம் மாஸ்கோவை புதிய கோணத்தில் காண்பிக்கப் போறோம்'' என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.