தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
கோட் படத்தை அடுத்து தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார் விஜய். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் விருப்பத்திற்காக சென்னை கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோயில் கட்டியுள்ளார் விஜய். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்த கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ்.
அதன் உடன், ‛‛நண்பர் விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு அவரது தாயாருடன் சென்றேன். நான் என்னுடைய ராகவேந்திரர் சுவாமி கோயிலை கட்டிய போது எங்கள் கோயிலில் ஒரு பாடலை பாடி தன் இருப்பை எங்களுக்கு அருளினார். இன்று விஜய் கட்டிய கோயிலுக்கு சென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டியதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையான தெய்வீக மற்றும் இனிமையான அதிர்வுகளை உணர்ந்தேன். அனைவரும் சாய்பாபா கோயிலுக்கு சென்று அவரின் அருளை பெறுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.