போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
நடிகை குஷ்பு தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். நடைபெற்று வரும் பார்லிமென்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கட்சி தலைமைக்கு எழுதியுள்ள கடித்தில் கூறியிருப்பதாவது:
வாழ்க்கை கணிக்க முடியாதது. நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம் என உணரும்போது, அது நம்மை சோதிக்கும். 2019ல் டில்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு முதுகு தண்டுவடத்தின் கீழ் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை துன்புறுத்துகிறது. இதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன்.
எனது மருத்துவ குழுவினர், என்னை பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என்று கண்டிப்புடன் அறிவுறுத்தினர். பிரசாரம் செய்தால் உங்கள் நிலை மோசமடையும் என்று தெரிவித்தார்கள். ஆனால், டாக்டர்களின் அறிவுரையை மீறி வலியையும், வேதனையையும் தாங்கிக் கொண்டு பிரசாரம் செய்து உழைத்தேன்.
தற்போது உடல் நிலை மோசமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் என்பது நீண்டநேரம் அமர்ந்து இருப்பது, நீண்ட பயணங்களை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி செயல்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலம் பெற்று மீண்டும் திரும்புவேன். பிரதமர் மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்பதைக் காண ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.