சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் |

சில இயக்குனர்களும், சில நடிகர்களும் இணைந்தே பயணிப்பார்கள். அவர்களுக்குள் சினிமா தாண்டி ஒரு நட்பு ஏற்பட்டிருக்கும். இவர்களை ஆஸ்தான இயக்குனர்கள், ஆஸ்தான நடிகர்கள் என்ற குறிப்பிடுவார்கள். ரஜினிக்கு எஸ்.பி.முத்துராமன், கமலுக்கு கே.பாலச்சந்தர். சிவாஜிக்கு திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்கு நீலகண்டன், விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமிக்கு, சூர்யாவுக்கு ஹரி இப்படியான பட்டியல் அதிகம்.
அந்த வரிசையில் ஜெய்சங்கரின் ஆஸ்தான இயக்குனர் மதுரை திருமாறன். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் 1971ம் ஆண்டு 'சூதாட்டம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா நடித்திருந்தனர். 50 படங்களுக்கு மேல் இயக்கி உள்ள இவர் ஜெய்சங்கரை வைத்து மட்டும் 20 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். சொந்தங்கள் வாழ்க, திருடி, மேயர் மீனாட்சி, தாய் வீட்டு சீதனம், இளையராணி ராஜலட்சுமி, ஆகியவை அவற்றில் முக்கியமான படங்கள்.