25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நேஹா மேனன். இவர் சென்ற வருடம் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சென்னை அணியின் வீரரான மகேஷ் பத்திரணாவின் போஸ்ட்டுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக சென்ற வருடத்திலேயே செய்திகள் வெளியானது. இந்த வருடமும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் நேஹா மேனன் - பத்திரணா காதல் கதையும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து தற்போது நேஹா மேனன் மனம் திறந்து விளக்கமளித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எனக்கு கிரிக்கெட் பார்க்கக் கூட தெரியாது. யாராவது உடனிருந்தால் பார்த்தால் பார்ப்பேன். அப்படி ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் பார்த்த போது பத்திரணா குறித்து அருகில் இருந்தவர் கூறினார். அதன்பிறகு தான் பத்திரணா குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்தேன். இந்த கிசு கிசு அப்போது எனக்கு ஜாலியாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் பத்திரணாவை பார்த்தது கூட கிடையாது' என்று கூறியுள்ளார்.