தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் | துரந்தர் 2 தெலுங்கு பதிப்பில் இடம் பெறும் ஹிந்தி பாடல்கள் | விஜய் குறித்து நான் அப்படி பேசவில்லை : சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் | துரந்தர் 2 டிரைலர் : 5 மொழிகளில் 65 மில்லியன் பார்வைகள் | 50ஐக் கடந்தது 2026 ரிலீஸ் : இந்த வாரமும் 5 படங்கள் ரிலீஸ் | வெற்றி விழாவுக்கு தயாராகும் தாய்கிழவி படக்குழு |

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ். இப்போது அதை நிறைவேற்றி உள்ளார்.
படை தலைவன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சியில் ராகவா நடித்துள்ளார். இதுபற்றி அன்பு கூறுகையில், ‛‛படை தலைவன் படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சி இருந்தது. இதில் நடிக்க ராகவா லாரன்ஸிடம் கேட்டோம். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்து தந்தார். இதற்காக அவர் சம்பளமும் வேண்டாம் என கூறிவிட்டார். 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். லாரன்ஸால் படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது'' என தெரிவித்துள்ளார்.




