சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணியில் வெளியான 'சிங்கம்' படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வரவேற்றை 3வது பாகம் பெறவில்லை. இதனால் அதன் நான்காம் பாக கதை தயாராக இருந்தும் சூர்யா நடிக்காமல் ஒதுங்கினார். ஹரி, சூர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் சிங்கம் 4 கைவிடப்பட்டது.
இதுகுறித்து ஹரி கூறியிருப்பதாவது: நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றித்தான் கேட்கிறார்கள். சிங்கம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த படம். அதனால் அடுத்த படத்திற்கு அதிக உழைப்பும், யோசிப்பும் வேண்டும். எனக்கும் சூர்யாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அருவா கதை அப்படியே இருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். சிங்கம் 4 பற்றி காலம்தான் பதில் சொல்லணும். நான் இப்போது ரத்னம் படத்தில் பிசியாக இருக்கிறேன். எனது வழக்கமான பாணியிலான பக்கா ஆக்ஷன் படம் இது. விஷால் இதில் வேற மாதிரி வந்து நிற்பார். என்றார்.