லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகள் சில பல பிரச்னைகளுக்குப் பிறகு தற்போது ஆரம்பமாகி நடந்து வருகிறது. சமீபத்தில் முன்னாள் நடிகரும், தயாரிப்பாளரும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நடிகர் சங்கத்திற்காக தலா ஒரு கோடி ரூபாயை அவர்களது சொந்த நிதியிலிருந்து வழங்கினர். அது போல நடிகர் விஜய்யும் ஒரு கோடி ரூபாயை அவரது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான விஷால், “நன்றி என்பது இரண்டு வார்த்தைகளைக் குறிக்கிறது. ஆனால், ஒரு நபர் இதயத்திலிருந்து அதைச் செய்தால் அதற்கு நிறைய அர்த்தம். எனது அபிமான நடிகர், எங்களது நடிகர் விஜய் அண்ணனைப் பற்றித்தான் பேசுகிறேன். நடிகர் சங்க கட்டடப் பணிக்காக ஒரு கோடி ரூபாயை வழங்கியதற்கு நன்றி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
ஆம், உங்கள் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டடம் முழுமையடையாது என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். இப்போது அதை சீக்கிரம் நடக்கும்படி எங்களை தூண்டிவிட்டீர்கள். உங்களது ஸ்டைலில் நன்றி நண்பா,” எனப் பதிவிட்டுள்ளார்.