தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
முன்னணி நடிகை பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினரான மீரா சோப்ரா, தமிழில் கடந்த 2005-ல் வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மருதமலை, ஜாம்பவான், லீ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு குறையவே டில்லி திரும்பிய அவர் தந்தையின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான 'சாபட்' படத்தில் நடித்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். 40 வயதாகும் மீரா சோப்ரா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ரஷித் என்ற மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். சமீபத்தில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 12ம் தேதி ஜெய்ப்பூர் சாலையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் ஒன்றில் திருமணம் நடக்க உள்ளது . நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமண தகவலை மீரா சோப்ரா அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.